Thursday, March 25, 2010

ரொ...ம்ப ரொமான்டிக்காக ஒரு கவிதை!

அன்பே
என்ன ஆச்சர்யம்
இன்பமான இரவு வரும் போதெல்லாம்
அந்த இனிய உணர்வும்
கூடவே வருகிறதே

வைகறையின் வசந்தத்தில்
வராத அந்த உணர்வு
மத்தியான மத்தாப்பில்
மலராத அந்த உணர்வு
அந்தி நேரத்து அழகில்
ஆர்ப்பரிக்காத அந்த உணர்வு

பொல்லாத இந்த இரவு வந்ததும்
எங்கிருந்து வருகிறது என்று கூடத்
தெரியாமல் ரகசியமாய்
வந்து விடுகிறதே

இதோ
இந்த இரவு வந்து விட்டது
நட்சத்திரங்கள் மின்னுகின்றன
நிலவும் எழுந்து விட்டது
அற்புதமான அந்த
உணர்வும்....




ந்


தே

.

.

.


வி


ட்





து

.

.

.

தூக்கம்!

http://jambazarjaggu.blogspot.com

வித்தியாசமான வலைப்பூ.. முயற்சித்து பாருங்கள்..

No comments: