கரிசல் காடுகளில் இது
கந்தகங்களின் அறுவடை காலம்...
சிதறி கிடக்கும்
மண்டை ஓடுகளில்..
சிறிதோ.. பெரிதோ..
நம் மகனின் காலுக்கேற்ப
வாங்கி செல்வோம்...
நல்ல உதை பந்தாகலாம்...
அன்பு மனைவியின்
பாவாடை நாடாவிற்கோ
உள் பாடி ஊக்கு தைப்பதற்கோ
இருக்கவே இருக்கிறது
நம் சகோதரனின்
நரம்புகள் விற்பனைக்கு..
.
நம் வீட்டு கர்ப்பபையில்
குண்டுகள் வெடிக்காதவரை...
எவன் செத்தால் நமெக்கென்ன..?
.
வா நண்பா..,
நமெக்கென இருக்கவே இருக்கிறது..
''''சாராய கடையும்
ஷகீலா படமும்.. ''''
- முடிவிலி
1 comment:
veri thanam na.. suya nalam pathi nalla eluthi irukaru.. appadiyae konja action points eluthi iruntha innu nalla irunthirukkum..
Post a Comment