மரித்த பூக்களுக்கெல்லாம்
காகிதத்தில் கல்லறை செய்து,
எவனோ உமிழ்ந்த எச்சத்தில்
உயிர் வாழும் அட்டையோடு,
மெழுகின் மங்கிய ஒளியில் உணவருந்தி,
நம் காதல் உயிர் பிழைக்க வேண்டாம்...
நடைபாதை ஆவாரம்பூவை நடந்தவண்ணம் ரசித்துக்கொண்டு,
நகராது போன நிமிடங்களைப் பற்றி நிறுத்தாமல் பேசிக்கொண்டு,
தெரியாமல் விரல்படவேண்டி
தெரிந்தே உன்னருகில் வரும்பொழுது,
இரண்டறக் கலந்த மூச்சுக்காற்றை
இயன்றவரை சேகரித்து வை.....
அதில் மட்டும் வாழ்ந்தால் போதும்,
உனக்கும் எனக்குமான காதல் !
- லக்ஷ்மி சகாம்பரி
http://www.sahambari.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment